மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.
ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம் ராசிக்காரர்களுடன் நண்பர்களாக இருப்பது நல்ல. இவர்களை கூட்டாளிகளாகவும் சேர்த்துக் கொள்ளலாம். கடக ராசிக்காரர்களுடன் சுமூகமாக இருக்கலாம். மிதுன ராசிக்காரர்கள் மீன ராசிக்காரர்களுக்கு எதிரியாக இருப்பர்.பாடல், சினிமா, புத்தகம் படிப்பதில் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். பிடித்தமான பொருட்களை பாதுகாக்க அதிக நேரம் செலவிடுவர். எல்லோரும் தன்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்மிதுன ராசிக்காரர்கள் யாராவது ஒருவர் மீது அளவுக்கதிகமான அன்பு காட்டுவார்கள். இதனால் சிலருக்கு காதல் தோல்வியும், திருமண பந்தம் முறிவதும் நிகழ வாய்ப்புண்டு. மிதுன ராசிக்காரர் தனது துணையை விட்டு மற்றொருவர் மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால்தான் இவர்களது வாழ்க்கை சிறக்கும்பயந்த சுபாவம் கொண்டவர்கள். யாரிடமும் தனது குறையை சொல்லிவிடுவர். இதனை பலர் பயன்படுத்திக் கொள்வர். யதார்த்தத்தை புரிந்து கொள்ளவே மாட்டார்கள். தன்னம்பிக்கையற்ற, சஞ்சலம் மிக்கவர்களான இவர்கள், எந்த காரியத்தையும் உடனடியாக முடித்துவிட வேண்டும். ஏதாவது இழுபறி ஏற்படின் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள். பலரை காதலிக்கும் ஆசை உள்ளவர். இதனால் வாழ்க்கை பாதிக்கும் என்ற பயம் அற்றவர். பல காதல் தோல்விகளை எதிர்கொள்பவர். உபாயம் கஷ்டங்களில் இருந்து விடுபட செவ்வாய் அல்ல சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். காயத்ரி மந்திரம் ஜபிக்கலாம்.
இவர்களுக்கு மரகத கல் அதிர்ஷ்டமாகும். இதனை வெள்ளி மோதிரத்தில் பதித்து புதன்கிழமையன்று அணிய வேண்டும். அதிக கஷ்டம் ஏற்படின் செவ்வாய்கிழமை விரதம் இருக்கலாம்.
மற்றவர்களை எளிதாக கவரக்கூடியவர்கள். நிலைத்தன்மை கொண்டவர்கள். தாங்கள் கொண்ட கொள்கையை எந்நேரத்திலும் விடமாட்டார்கள். புத்திக்கூர்மை மிக்கவர்கள். விரோதிகளைக் கண்டாலும் புன்னகைக்கும் பரந்த மனம் கொண்டவர். எல்லோரையும் அனுசரித்துப் போவது இவரது விசேஷ குணமாகும். இவர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவர். தயாள குணம், கருணைவாதி, மனித நேயம் கொண்டவர். எல்லோரையும் சமமாக மதிப்பார். சகித்துக் கொள்ளுவர். துரோகிகளையும், பொய்யர்களையும் மன்னிக்க மாட்டார். உணவு உண்ணுவதில் அதிக ஆர்வம் காட்டுவார். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். விரோதிகளையும் திறன் அறிந்து பாராட்டுவார். ஒரு வார்த்தை பேச வேண்டுமென்றாலும் யோசித்துத்தான் பேசுவார். எந்த கஷ்டத்தையும் தனியாக நின்று சமாளிப்பார்மிதுன ராசிக்காரர்கள் இயந்திரம் தொடர்பான கல்வியில் ஆர்வம் காட்டுவர். ஏனெனில் இயந்திரத் தொடர்பான கல்வியில் இவர்கள் அதிக புகழ் அடைவர்மிதுன ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு ஆரோக்கியமானவர்களாகவும், தடிமானாகவும் காணப்படுவர். மன உளைச்சல் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இதனாலேயே உடல்நிலை பாதிக்கப்படும். ஏதேனும் பெரிய வியாதி வருமோ என்ற பயம் இருக்கும். நெஞ்சு வலி, இதய நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இரவு உணவை குறைத்துக் கொள்வது நல்லது. துளசி, மிளகு போன்ற மருத்துவ குணம் கொண்டவைகளை பயன்படுத்துதல் நல்லது. கீழே விழுந்து அடி படும் வாய்ப்புண்டுஇவர்கள் உறவினர்களை விட நண்பர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் உறவினர்கள் இவர்களை எதிரிகளாக எண்ணுவர். வீடோ அல்லது நிலங்களோ கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தினர் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டார்கள். இவர்களுக்கு கொள்ளுப்பேரனை பார்க்கும் யோகமும் உண்டு.
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பார்வை இருப்பதால் இவர்களுக்கு புதன்கிழமை அதிர்ஷ்ட தினமாகும். வியாழக்கிழமையும் உகந்ததே. திங்கட்கிழமை மட்டும் அசுபம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 5 அதிர்ஷ்ட எண்ணாகும். 5ன் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமாகும்.
கருத்துரையிடுக