வாழைச்சேனை காவத்தமுனை ஒட்டுவலி வயல் பிரதேசத்தில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றை வாழைச்சேனை பொலிசார் கண்டுபிடித்து உள்ளனர்.
தலையில் பலத்த காயத்துடன் காணப்படும் சடலத்திற்கு உரியவர் சுமார் 7 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என வாழைச்சேனை பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த சடலத்தை வாழைச்சேனை நீதிபதி சென்று பார்வையிட்டுள்ளார்.
இதுவரை இந்த சடலம் அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது
கருத்துரையிடுக