யாழ்ப்பாணம் 21.02.2009 கோண்டாவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.தாவடி தெற்குபகுதியைச் சேர்ந்த ஜயாத்துரைபிரத்தினசிங்கம் 53வயதானவர் இவரே யாழ்ப்பாணம் கோண்டாவில் அரசினர் ஆஸ்பத்திரிக்கு அண்மையில் உள்ள நாராயணன் ஒழுங்கைப்பகுதியில் இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டார்.
பிரதேசத்தை சேர்ந்தவர்களின் தகவலின் படி நேற்றிரவு 11 மணியளவில் சைகிளும் அவரது சடலமும் அவ்விடத்தில் போடப்பட்டிருக்கலாம் என்று கூறினர்.அப்பகுதி கிராமசேவையாளர்
முருகையா கூறுகையில் கொல்லப்பட்ட ஜயாத்துரை திருமணம் ஆகதவர்
சுருட்டுச்சுற்றும் தொழிலை செய்பவர் என்றும் கூறினார்.
கருத்துரையிடுக